Summary in tamil

ஒரு விடயத்தை அதன் கருத்து சிறிதும் குன்றாமல் குறைந்த சொற்களில் திரட்டி எழுதுவது சுருக்கம் எனப்படும்.


சுருக்கம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை ?

1. சுருக்கம் சொந்த வசன நடையிலே எழுதப்படும்.

2. உதாரணங்கள். உவமானங்கள். மேற்கோள்கள், வருணனை. அடைமொழிகள் என்பவைகளை முற்றாக நீக்கிவிடுதல்.

3. கொடுக்கப்பட்ட மூலப்பகுதியில் எத்தனை பந்திகள் இருப்பினும் ஒரு பந்தியிலே சுருக்கத்தை எழுதி முடித்தல்.

4. தற்கூற்று வாக்கியங்களைப் பிறர் கூற்று வாக்கியங்களாக எழுதல்.

5. மூலப் பகுதியில் சொல்லப்பட்டாத விடயங்களையும். சொந்த கருத்துக்களையும் எழுதுவதைத் தவிர்த்தல்.

6. ஒழுங்குபடுத்தல் - குறித்துக் கொண்ட அம்சங்களில் மிகப் பிரதானமானவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்திக் கொள்ளல்.

7. பருமட்டான சுருக்கம் எழுதுதல்:- ஒழுங்குபடுத்திய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, சொந்த மொழி நடையில் பிழையின்றிப் பொருட்செறிவோடு. சுருக்கமாக எழுதுதல்.

8. ஒப்பு நோக்கல்:- பருமட்டாக எழுதப்பட்ட சுருக்கத்தில் முக்கிய அம்சங்கள் குறிக்கப்படாதிருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளல்.

9. திருத்தமாக எழுதுதல்:- திருத்தப்பட்ட பரும்படியான சுருக்கத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்த பின் குறியீடுகளை அனுசரித்தும் சொல் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு இலகு மொழி நடையில் எழுதுதல்.

 10.மூலப் பகுதியில் தன்மை முன்னிலைச் சொற்கள் இடம் பெற்றிருப்பினும் சுருக்கம் படர்க்கையில் மட்டுமே எழுதப்படுதல் வேண்டும்.

11. செய்யுள் இடம் பெற்றால் அதன் பொழிப்பைச் சுருக்கி வசன நடையில் எழுதுதல்.



சுருக்கத்தின் பயன்பாடு

இன்று மனிதனின் அன்றாட வாழ்வில் மிக மிக அவசியமாகின்றது. சுருக்கமாகச் சொன்னாலும் கேட்போருக்கு விளங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.

1. அறிஞர் பலரால் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளோ, ஏனைய விடயங்களோ அப்படியே பத்திரிகையில் வெளியிட முடியாது. அதனால் பத்திரிகைகளில் சொற்பொழிவுகளின் சுருக்கத்தையே பத்திரிகையாளர் வெளியிடுகின்றனர். எனவே பத்திரிகைத்துறைக்குச் சுருக்கம் பயன்படுகிறது.

2. கல்வியற்கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், ஏனைய கல்வி நிறுவனங்களிலும் நிகழ்த்தப்படும் விரிவுரைகளின் முக்கிய அம்சங் களைக் குறிப்பெடுத்துக் கொள்கின்றனர்.அதற்கும் சுருக்கம் பயன் படுகிறது.

3. புத்தகங்களை, வாசிப்பவர்கள் அவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு சுருக்கம் எழுதும் பயிற்சி உதவுகின்றது.

4. சொற்பொழிவின் முடிவிலும், கட்டுரையின் முடிவிலும் ஒருவர் விளக்கிய கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதற்குச் சுருக்கம் பயன்படுகிறது.

5.சுற்று நிருபங்கள். அறிக்கைகள், வானொலிச் செய்திகள் ஆகியவைக ளைக் குறித்த அளவில் அடக்கக் கூடியதாகத் தயாரிப்பதற்கு சுருக்கமெழுதும் பயிற்சி இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.

பொதுவாகச் சுருக்கமெழுதும் பயிற்சியினால் கருத்தூன்றி அவதானிக்கும் தன்மை வளரும், மேலும் ஓர் உரையில் முக்கிய கருத்து எதுவெனவும் முக்கியமற்றது எதுவெனவும் பகுத்துக் காணும் திறமை அதிகரிக்கும். அதனால் சுருக்கம் சம்பந்தமாக மேற்குறிப்பிட்ட விடயங்களை மாணவர் கருத்திற்கொண்டு சுருக்கம் எழுதும் பயிற்சியிலும் ஒரு விடயத்தை சுருக்கிக் கூறும் பயிற்சியிலும் ஈடுபடுதல்' வேண்டும்.



சுருக்கம் எழுதுதல் - மாதிரிப் பயிற்சி ?


1. அவன் இன்று கொழும்புக்கு வந்தால், கிழக்கே உதிக்கும் சூரியன்

மேற்கே உதிக்கும். சுருக்கம்:- அவன் இன்று கொழும்புக்கு வரமாட்டான்.


2.சோதிடன் செல்வந்தனை நோக்கி உனக்கு நிலம், நீர்.தீ, வளி, ஆகாயம் என்னும் ஐம்பொருட்களுள் ஏதாவது ஒன்றினால் பேராபத்தொன்று ஏற்படலாம்" எனக் கூறினான்.

சுருக்கம்:- கம்பூதங்களுள் ஒன்றால் செல்வந்தனுக்கு ஆபத்து ஏற்படலாம் எனச் சோதிடன் கூறினான்.


3. "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனினி

சுருக்கம்+ கற்றதன் பயன் இறைவனைத் தொழுதலாகும்.


4. சூரியனின் உதயம், வைகறையின் தோற்றம், மாலையின் பிறப்பு. ஞாயிற்றின் மறைவு. மழை வீழ்ச்சி. இடிமுழக்கம். மின்னல் ஆகிய இயற்கை நிகழ்ச்சிகளை ஆதி மனிதன் கண்டு கற்பனை செய்தான். அவ்வியற்கை நிகழ்ச்சியை விளக்க அவன் கட்டுக்கதைகளை ஆக்கினான்.

சுருக்கம்:- ஆதி மனிதன் இயற்றை நிகழ்ச்சிகளை விளக்கிக் கட்டுக்கதைகள் ஆக்கினான்.


5. "மற்றவர்கள் என்ன இடையூறு செய்தாலும் சரி என் கணவனுக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்வேன் என்று வாழும் சிறந்த மனைவியைப் போல "மற்றவர்கள் எங்கள் வாழ்க்கையைக் கெடுக்க எவ்வளவு முயன்றாலும் சரி என் மனைவிக்காக என் வாழ்க்கை யைத் தியாகம் செய்வேன்" என்று வாழும் உயர்ந்த கணவனைப் போல. காந்தி சமய நெறிக்காகத் தம் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்.

சுருக்கம்:- குடும்பத்தில் கணவனுக்காக மனைவிக்காக கணவனும் தியாகஞ் செய்வதுண்டு அவ்வாறே மகாத்மா காந்தி சமய நெறிக்காகத் தம் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்.


6. அந்தப் படகு கவிழ்ந்தா எல்லோருமே இறந்தனர். ஒருவர்கூட நீந்திக் கரையேறவில்லை. என்ன பரிதாபம். சுழியோடிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பல மணித்தியாலயங்கள் தேடியும் உடம்புகள் மாத்திரமே அகப்பட்டன.

சுருக்கம்:- அந்தப்படகு விபத்தில் எல்லோருமே இறந்தனர்.


7. பசு சாந்தமான மிருகம். அதை எல்லோரும் விரும்புவர். அதன் மூலம் கிடைக்கும் பயன்களோ அதிகம். அதனால் கிராமப்புற மக்கள் பசுவை விரும்பி வளர்த்தும் பல பயன்களையும் பெற்று வருகின்றனர்.

சுருக்கம்:- பசுவை அதன் பயன் கருதி கிராமப் புற மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.



கீழே தரப்பட்டுள்ள அ,ஆ.இ.ஈ என்னும் உரைப்பகுதிகள் ஒவ்வொன்றினதும் சுருக்கத்தை 15 - 20 சொற்களில் அமையக் - கூடியவாறு வேறுவேறாக எழுதுக.

(சொற்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.)

அ) தேனீக்கள் மலர்களிலிருந்து தேனைச் சேரிப்பது போலவே. மாணவரும் நூல்களிலிருந்து அறிவைச் சேகரித்தல் வேண்டும். மாணவர் அறிவைச் சேகரிப்பதற்கு மிகவும் வாய்ப்பான இடம் நூலகமேயாகும். நூலகத்திலே மாணவர் இன்பப் பொழுது போக்கிற்காககவும் வாசிக்கலாம். ஆராய்ச்சி செய்வதற்காகவும் வாசிக்கலாம்.பெரும்பாலான பாடசாலைகளில் சிறிய அளவிலா யினும் நூலகங்கள் உள்ளன. சில பாடசாலைகளில் எல்லா வசதிகளுமுடைய நல்ல நூலகங்களும் உள்ளன. மாணவர் தமது வகுப்பறையிற் இயலுமான அளவு விரிவாக்கி வளப்படுத்துவதற்கு இத்தகைய நூலகங்களை இயலுமான அளவு பயன்படுத்த வேண்டும்.

ஆ) இரயில் பாதையில் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு நடக்கவில்லை. காலின் உணர்ச்சி கொண்டே நடந்தான் இரயில் தண்டவாளத்தின் ஓரமாகக்குவிந்திருந்த கருங்கல் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின. ஒன்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின. அவற்றைப் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்தான்.

  இ) அன்பென்றால் என்ன? அது பல வர்ணமுள்ள வானவில்லுப் போன்றது வாழ்வென்னும் இருண்ட முகிற் கூட்டங்களை ஒளியில் தேய வைப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை வாரிவாரி இறைப்பது நித்திரையில் ஆழ்ந்திருக்கும் குழந்தையைப் பாருங்கள். அங்கே தொட்டிலை ஆட்டிக்கொண்டு நிற்கும் தாயின் உள்ளத்தில் உதிப்பது என்ன? இந்த அன்பு தான். சுடுகாட்டிலும் ஆதரவாகக் கூடி நிற்போர் உள்ளத்தில் மிளிர்வது என்ன? இதே அன்பு தான். எம்மைப் போன்று சாதாரண மக்களை அரசகுமாரர் ஆக்குவது அன்பென்னும் மந்திரவித்தை அன்றோ? பெரிய வெற்றி வீரனின் அருஞ் செயல்களுக்கு ஆதாரமாயிருப்பது அன்பன்றோ?



கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சாராம்சத்தை 40 - 45 சொற்களில் அமையக்கூடியவாறு சுருக்கி எழுதுக.

மொழி கற்கும் பணியில் மாணவர்களுக்கு கல்வி புகட்டும் கருவியாக உடனுழைக்கும் நண்பனாக உறுதுணை புரியும் ஒரு வசதிப் பொருளாகக் கண்ணி இயக்குகின்றது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாற்ழக்கம் வைத்தொரு கல்வி மனப்பழக்கம்" என்று பாடினார் ஒளவையார் மொழியமைப்பின் கூறு ஒன்றினை மாணவ னுக்கு அறிமுகப்படுத்திப் பின்னர் அக்கூறு பற்றி அவன் நன்கு விளங்கிக் கொள்ளவும் அதனைப் பயன்படுத்திக் கையாளும் ஆற்றலைப் பெறவும். மொழிப்பயிற்சி என்பது தேவைப்படுகின்றது. இந்நோக்கங்களை நிறைவேற்றும் குறிக்கோளுடன் பயிற்சி வினாக்கள் அமைக்கப் படுகின்றன.இவ்வினாக்களுக்கு விடையளிக்க தயாரித்துக் கண்ணி வழிக்கல்விகளை கொடுக்கலாம் இவற்றை நோக்கிய மாணவன் இவற்றிற்கேற்ப விடையளிக்கின்றான். உடனே மாணவன் தன் விடைகள் சரியா?தவறா? எனக் கண்ணி வழி அறிகிறான். சரி என்றால் 

பாராட்டையும் தவறு செய்வதால் திரும்பச் செய்வதற்குரிய தூண்டு தலையும் அவன் கண்ணி வழிபெறுகிறான் திரும்பத் திரும்பத் தவறு செய்வதால் சரியான விடையையும் அவன் விரும்பினால் கணணியில் பெற முடியும். இவ்வாறு மொழிகற்கும் மாணவனுக்கு மொழிப் பயிற்சி நல்கும் ஒரு தனிப்பட்ட ஆசிரியனாக அதாவது கல்வி புகட்டும் கருவியாகக் கண்ணி திகழ்கின்றது.


சுருக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டி கருத்துக்கள்

  • மொழி கற்கும் பணியில் கண்ணி முக்கிய இடம் பெறுகின்றது.
  • மொழிக்கூற்று பற்றிய அறிவுக்கும் அதனைக் கையாளும் ஆற்றலுக்கும் மொழிப்பயிற்சி அவசியம்.
  • மொழிற்பயிற்சியைக் கண்ணியினூடாக வழங்கலாம்.
  • கண்ணிவழிக் கல்வியினூகக் கற்றலுக்கு மாணவர்கள் தூண்டப் படுகின்றன
  • எனவே கல்வி புகட்டும் ஆசானாக கண்ணி விளங்குகின்றது.


கீழே தரப்பட்டள்ள உரைப்பகுதியின் கருக்கத்தை 40 - 45 சொற்களில் அமையக்கூடியவாறு எழுதுக.

(சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக)

கல்வி பயிலும் பருவம் இளமைப் பருவம் என்று சொல்லப்படுகின்றது கலைகள் பயிலுவதற்கு இளமைப்பருவமே சாலச் சிறந்தது. அதனாலே தான் இளமையிற் கல் என்னும் ஆணைபிறந்தது, மானுடராய்ப் பிறந்தவர் எல்லாருக்கும் இது பொதுவான நெறி. இதன்படி ஒழுக அதன் மீது பதிப்பிக்கப்படும் உயர்ந்த எண்ணக்கருக்களும் சீரிய இயல்புகளும் என்றைக்கும் மாறா மாணவர்களுக்கு தொழிற்கல்வி இன்றியமையாதது என்ற இக்காலத்தில் உலககெங்கும் உள்ள அறிஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்தியாவும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றது. உடல் உழைப்பை ஒட்டிய தொழில் ஆடவர் மகளிர் ஆகிய இருபாலருக்கும் வேண்டப்படுவது என்பதும் அப்பயிற்சி இளம் பிராயத்திலேயே அளிக்கப்பட வேண்டும் என்பது பலர் கருத்து. ஆனால் நம் நாட்டில் முன்பு ஒரு காலத்தில் இருந்த இதை விட முக்கியமான பயிற்சி ஒன்றை மறந்துவிடலாகாது. அக்காலத்தை விட இக்காலத்தில் அது பெரிதும் வேண்டப்பட்டுகிறது. மானுட வாழ்க்கையானது பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்டது என்னும் கோட்பாடு இந் நாளில் அறவே மறந்து போய்விட்டுது. எங்கும் ஒரே போட்டி மயம் போர்க்களத்தின் காட்சியே யாண்டும் தென்படுகிறது. பகுத்தளித்தல் என்னும் பண்புக்குப் பதிலாகப் பறித்துப் பிடுங்குதல் என்னும் பாதகமே பார்க்கும் இடமெங்கும் காட்சி கொடுக்கிறது. நவீன படிப்பு முறையே இத்தகைய துல்லிய நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வியானது கைங்கரியமாய் இருந்து போய் இப்போது போட்டிமயமாய் மாறியிருக்கிறது. என்னென்ன முறைகளில் பிறரை விடத் தாம் மேலான அந்தஸ்து வைக்க முடியும் என்பதுவே இக்காலத்தவர் பெறும் பயிற்சியாகும். துவேஷமும் துயரமும் அதிகரிப்பது இதனாலேயேயாம்.


இடம் பெற வேண்டிய கருத்துக்கள் ?

01. உயர்ந்த எண்ணங்கள் ஆழப் பதியக் கூடிய இளமைப்பருவமே கல்வியும் கலையும் பயில்வதற்குச் சிறந்தது.

02. இளமையிலேயே இருபாலருக்கும் தொழிற் கல்வி அவசியமானது.

03. ஆனால் இதைவிட முக்கியமானது பரஸ்பர உதவியை அடிப்படை யாகக் கொண்ட கல்வியாகும். இது முற்காலத்தில் இருக்கின்றது. இதனால் மறக்கப்பட்டுள்ளது.

04. கல்வி உட்பட்ட அனைத்தும் போட்டிமயமாகிவிட்டது இன்று மறக்கப்பட்டுள்ளது.

05. எனவே இன்று வேண்டப்படுவது பரஸ்பர உதவியைப் போற்றும் கல்விப் பயிற்சியே.


Post a Comment

Previous Post Next Post